விசா முறையில் மாற்றம்!

Thursday, May 4th, 2017

நாட்டில் நிலவும் சுமூகமான நிலை காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.அவர்களின் நலன் கருதி எந்த சிக்கலும் இன்றி விசா வழங்குவதற்கான முறையில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது

கடந்த வருடத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் நிலவும் சிக்கல் காரணமாக புதிய வேலைத்திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: