இணையவழி வர்த்தகத்திற்கும் வருகிறது புதிய சட்டம்!
Friday, March 16th, 2018இலங்கையில் இணையவழி வர்த்தக நடவடிக்கைகளிற்கு புதிய சட்டங்களை அமுலாக்குவதற்கு இலங்கை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈகொமர்ஸ் எனப்படும் மின்வர்த்தகம் தொடர்பாக இலங்கையில் உள்ள சட்டத்திட்டங்களும், ஒழுங்குவிதிகளும் போதுமானதாக இல்லை.
இந்தநிலையில் இதற்கான புதிய ஒழுங்குவிதிகளையும், கட்டுப்பாடுகளையும் உருவாக்குவதற்காக, சர்வதேச வர்த்தக மையத்துடன் இணைந்து, இலங்கை நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கைகளை எடுக்கிறது.
இதற்காக கொழும்பில் இன்றும் நாளையும் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாகவும், இதில் சர்வதேச வர்த்தக மையத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பேஸ்புக் கணக்கிலிரந்த 80 வீதமான போலி கணக்குகள் நீக்கப்படும்!
திருகோணமலையில் நாளொன்றுக்கு 60 தொற்றாளர்கள் வீதம் பதிவு - பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் எச்சரிக்கை!
நாட்டில் இதுவரை 75 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொவிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது - தொற்றுந...
|
|