அவசியமான பெற்றோல் கையிருப்பில் உள்ளது – வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
Wednesday, April 20th, 2022எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசியமான பெற்றோல் கையிருப்பில் இருப்பதுடன், அடுத்த 14 நாட்களுக்கு தேவையான டீசல் கையிருப்பில் இருப்பதாகவும் வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (20) இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக தவிர்க்கப்பட்டு வருகின்றபோதும், எரிபொருள் போக்குவரத்தில் இன்னும் சிக்கல்கள் இருப்பதாக அவர் சபையில் ஒப்புக்கொண்டார்.
இதேவேளை, எரிபொருள் போக்குவரத்து சேவையில் இருந்து இன்றுமுதல் தாம் விலகுவதாக எரிபொருள் தாங்கி ஊர்திகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
காய்ச்சல் அல்லது உடல்வலி இருக்கும் கோவிட் நோயாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
உகாண்டா தலைநகரை குறிவைத்து தற்கொலை குண்டு தாக்குதல்!
எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்தியுங்கள் - இலங்கை வங்குரோத்து நிலைக்கும் செல்லாது - அமைச்ச...
|
|