பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Monday, January 24th, 2022இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகத்தின் கொரோனா தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்
அதனடிப்படையில் மூன்றாம் செலுத்துகையை கட்டாயமாக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் இலங்கையிலும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் சுகாதார அமைச்சரிடமும் சட்டமா அதிபரிடமும் ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அண்ணா என் உயிரை காப்பாற்றுங்கள்: கதறி அழும் யுவதி!
காபன் பரிசோதனை கட்டணம் குறைப்பு – நிதியமைச்சு!
20 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியாக Pfizer - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
|
|