இலங்கையர்களுக்கு இந்தியாவில் பயிற்சி.
Saturday, December 30th, 2017இலங்கையர்களுக்கு 40க்கும் அதிகமான துறைகளில் பயிற்சிகளை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் முன்வர முடிவெடுத்துள்ளது.
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளதார ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இதன்கீழ் 40க்கும் அதிகமான பிரிவுகளில் பணியாற்றுகின்றன 45 வயதான இலங்கையின் அரச நிர்வாக அதிகாரிகளுக்கு, பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் திகதி முதல் மார்ச் மாதம் 31ம் திகதி வரையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
Related posts:
சமுர்த்தி பயனாளிகள் தெரிவில் முற்றிலும் அரசியல் தலையீடா?
வாகன இறக்குமதித் தடை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவதற்கு தயாராகும் இறக்குமதியாளர்கள்!
நாட்டுக்கு அவசியமான ஒளடதங்கள் தொடர்பான அறிக்கையை வழங்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, சுகாதார அம...
|
|