அல்வாய் பகுதியில் மினி சூறாவளி
Tuesday, May 17th, 2016
கரவெட்டி- அல்வாய் பகுதியில் நேற்றையதினம் மாலை வீசிய மினி சூறாவளியினால் 12 தற்காலிக வீடுகள் சேதமாகியுள்ளன. அத்துடன், மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் பல வீடுகள் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் மாலை குறித்த மினி சூறாவளி மழையுடன் வீசிய நிலையில் கரவெட்டி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே- 378 அல்வாய் பகுதியில் கடுமையான சேதம் உண்டாகியுள்ளது. சூறாவளி காரணமாக தற்காலிக வீடுகள் 12சேதமடைந்துள்ளதுடன், நிரந்தர வீடுகள் பல பலத்த சேதமடைந்துள்ளன.
மேலும் பெரியமரங்கள் பல முறிந்து விழுந்த நிலையில் குறித்த பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
மேலும் சேதமடைந்த வீடுகளில் வாழ்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ள நிலையில் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது
Related posts:
சாவகச்சேரி பேருந்து நிலைய பெயர்ப்படிகம் விஷமிகளால் தகர்ப்பு : சுயலாப அரசியல்வாதிகளின் தூண்டுதல் காரண...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு என்று எதுவும் கிடையாது - தவறாக வழிநடத்தும் தரப்பினரது அறிக்கையால்தான்...
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோயில் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் ...
|
|
|


