அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானம்!
Thursday, December 21st, 2017நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது. சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் கூடிய வாழ்க்கைச் செலவு குழு கலந்துரையாடியபோது, நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் அதிகளவில் நுகர்வு செய்யப்படும் நாட்டரிசி உள்ளிட்ட அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
இதனால் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டு நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேற்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக வாழ்க்கைச் செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
Related posts:
ஜனாதிபதி தாய்லாந்து விஜயம்!
ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி மீண்டும் ஆரம்பம்!
பறக்கும் கமராக்கள் தெரிந்தால் சுட்டு விழுத்தப்படும் !
|
|