கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சிறிதளவு அதிகரித்த போதிலும், கடந்த ஒக்டோபரில் நிலவிய நெரிசல் குறைந்துள்ளது – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தகவல்!

Thursday, December 23rd, 2021

கடவுச்சீட்டு தலைமையகத்தில் வழங்கப்படும் கடவுச்சீட்டு தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

பத்தரமுல்ல தலைமையகத்தின் ஒரு நாள் சேவை ஊடாக நாளாந்தம் ஏறத்தாள 1200 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் சேவைக்கு தினசரி சராசரியாக 1,000 விண்ணப்பங்கள் வருவதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சிறிதளவு அதிகரித்த போதிலும், கடந்த ஒக்டோபரில் நிலவிய நெரிசல் தற்போது குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு சாதாரண சேவைக்கு 800 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

மேலும் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் பொதுமக்கள் சேவைகளைப் பெற வாய்ப்புகள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: