பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு !

Wednesday, March 10th, 2021

2019 இல் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக நடந்து வரும் விசாரணைகள் குறித்த விரிவான அறிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இந்த தாக்குதல்கள் தொடர்பாக 600 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் 200 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 66 பேர் தடுத்து வைக்கப்பட்டு தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சரத் வீரசேகர கூறியுள்ளமை குறிப்பிடத்தக்து.

Related posts: