அடுத்த ஆறு மாதங்களுக்கான மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!
Wednesday, July 19th, 2023மின்சார சபையின் அடுத்த ஆறு மாதங்களுக்கான மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் மின்சார சபையின் கணினி கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளுடன் இடம்பெற்றுள்ளது.
மேலும், பராமரிப்பு அட்டவணைகள், மின் தடைகள், நீர்மின் திறன் மற்றும் புதிய போக்குகள் ஆகியவை கலந்துரையாடலின்போது மதிப்பாய்வு செய்யப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஐநாவின் புதிய செயலாளர் பதவியேற்பு!
வடக்கு மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கல்!
இலங்கையின் கடன் பிரச்சினையில் பங்கைச் செய்யத் தயார் - சீனா - இந்தியாவுக்கும் அழைப்பு விடுத்துள்ளது ...
|
|