அரச நிறைவேற்று அதிகாரிகள் குழு தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்!

Tuesday, March 12th, 2019

அரச நிறைவேற்று அதிகாரிகள் நிறைவேற்று குழு அடுத்த வாரத்தின் பின்னர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்த குழுவின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய வேதன கொள்கையை மீறி அரசாங்கம் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தங்களது பிரச்சினைக்கு எதிர்வரும் ஒரு வாரகாலப்பகுதியினுள் தீர்வு கிடைக்க பெற வேண்டும். இல்லாவிடின் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச நிறைவேற்று அதிகாரிகள் குழுவின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்துள்ளார்.

Related posts:


வடக்கின் விவசாயத்துறை மேம்பாடடைய விவசாயிகளுக்கு அனைத்தவகையான மானியங்களும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டு...
'யாஸ்' புயல், தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் அருகே நாளை மறுதினம் கரையை கடக்கும்!
'சுபீட்சத்தின் தொலைநோக்கு' வேலைத்திட்டத்தின் இந்த வருடத்திற்கான இறுதி வாரம் இன்று ஆரம்பம் - இராஜாங்க...