அரச நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் 11 வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தம் – நாடாளுமன்றத்துறை மேற்பார்வைக் குழு சுட்டிக்காட்டு!
Monday, August 14th, 2023
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் அரச நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான நாடாளுமன்றத்துறை மேற்பார்வைக் குழு இதனை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த 11 திட்டங்களுக்காக கிட்டத்தட்ட 2531 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
திட்டங்கள் முடக்கப்பட்டதன் காரணமாக இந்நாட்டு மக்கள் கிடைக்க வேண்டிய நன்மைகளை இழந்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது - நிதி அமைச்சர்!
37 பொருட்களை விநியோகித்தல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டது நுகர்வோர் விவகார அதிகாரசபை!
மோசடியில் ஈடுபடும் ஊழியர்களின் சொத்துகள் தொடர்பில் ஆராயப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன அதிரடி நடவ...
|
|
|
வடக்கு கிழக்கில் பெண்களை உரிமைகளுடன் தலை நிமிர செய்தவர் டக்ளஸ் தேவானந்தா - கிளிநொச்சியில் யாழ் மாநகர...
தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தாமதமாகும் - நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் ...
விஹாரமாதேவி பூங்காவை மீண்டும் கொழும்பு மாநகர சபைக்கு வழங்குங்கள் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவ...


