அரச நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிருபம்!
Saturday, June 1st, 2019
அரச நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அணியும் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிருபம் ஒன்று பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது
இந்த நிருபத்தின்படி, அரச நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் சாறி அணிவது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது கடமை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள் வரும் போது ஆண் உத்தியோகத்தர்கள் காற்சட்டை மற்றும் மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும்.
இதேவேளை, பெண் உத்தியோகத்தர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒஸரி) அணிந்திருத்தல் வேண்டும் என குறித்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையின் மொத்த அந்நிய செலாவணியில் 40 வீதம் தமிழா்கள் ஈட்டித் தருகின்றனர் - வடக்கின் ஆளுநர் !
இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் முன்பள்ளிகளை ஆரம்பிக்க அனுமதி - இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அறிவ...
இந்தியாவின் கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு எரிபொருள் - மார்ச் 15 ஆம் திகதி நாட்டுக்கு கிடைக்கும் என எ...
|
|
|


