அரிசி விலையை அதிகரிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை !
Friday, June 2nd, 2017
நெல்லையும் அரிசியையும் பதுக்கி வைத்து அரிசித் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி விலையை அதிகரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நெல்லையும் அரிசியையும் பதுக்கி வைத்து அரிசித் தட்டுப்பாட்டை வேண்டுமென்றே ஏற்படுத்தி விலையை அதிகரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் எதிராக நடவடிக்கைகளை எடுப்பது குறித்து வாழ்க்கைச் செலவு உபகுழுவில் தீவிரமாக ஆராயப்பட்டது.
இக்குழுவின் முடிவுக்கமைய அரிசி ஆலை உரிமையாளர்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் உள்ளூர் வர்த்தகர்கள் ஆகியோர்களின் விபரங்கள் தொடர்பான அறிக்கையொன்றை அவசரமாக பெற்றுக்கொள்ள வேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் அரிசியை இறக்குமதி செய்பவர்களின் விபரங்கள் அவர்கள் இறக்குமதி செய்யும் அரிசியின் கொள்ளளவு மற்றும் இறக்குமதி செய்யும் அரிசியை விநியோகிக்கும் பிரமாணம் தொடர்பிலான பிறிதொரு அறிக்கையையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென அமைச்சர் ரிஷாட் அதிகாரசபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதே போன்று உள்ளூர் ஆலைஉரிமையாளர்களிடம் இருக்கும் நெல்லின் கொள்ளளவு அரிசிக் கொள்ளளவு மற்றும் அரிசியை விநியோகிக்கும் நடைமுறை தொடர்பிலான மேலும் ஒரு அறிக்கையையும் கோருமாறு அவர் பணித்துள்ளார்.
இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ஹஸித திலகரத்ன தெரிவிக்கையில்இ 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் அரிசி இறக்குமதியாளர்களின் விபரங்களும் அரிசியைப் பங்கீடு செய்யும் நடைமுறையும் கோரப்பட்டுள்ளன. இவ்வருடம் மார்ச் மாதம் வரை அரிசியின் விலையை கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிகரித்து விற்பனை செய்த 2000 வியாபார நிலையங்கள் மீது நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை வழக்குத் தொடர்ந்துள்ளது. அத்துடன் இறக்குமதி செய்யப்படும் அரிசியை உள்ளூர் அரிசியுடன் கலந்து ஏமாற்றி வியாபாரம் செய்து வரும் வர்த்தகர்களுக்கெதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
Related posts:
|
|