அரசுசாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கும் வட்டியில்லாத கடன் திட்டம் – 07 ஆவது குழுவை இணைத்துக் கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி!

Tuesday, July 11th, 2023

அரசுசாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் 07 ஆவது குழுவை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி முழுமையான கடன் காலப்பகுதிக்கான 13% வீத குறைந்த வட்டி வீதத்தைப் பேணி இக்கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உயர்தரம் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களில் பொருத்தமான தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள மாணவர்களை 07 ஆவது அணியின் கீழ் வட்டியில்லாத மாணவர் கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

யாழ். பல்கலைக்கழகத்தில் போராடும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் எதிரொலி: கவனயீர்ப்புப் ப...
நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன் - சிறித...
மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் கையாளும் போது ஏற்படக்கூடிய ஒவ்வாமைகளைத் தடுப்பதற்கு விழிப்புணர்வு - உ...