அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள டுவிட்டர் செய்தியில் பாரதப் பிரதமர் தெரிவிப்பு!
Tuesday, January 19th, 2021
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள டுவிட்டர் செய்தி ஒன்றிலேயே இந்த கருத்தை மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசித் திட்டம் முன்னெடுக்கப்படுவதை முன்னிட்டு கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து டுவிட்டர் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்திருந்த பிரதமர் மோடி, அயல்நாடுகளுக்கு உதவும் இந்தியாவின் திட்டம் கொரோனா தடுப்பூசி விடயத்திலும் தொடரும் என்று உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் படகு அவுஸ்திரேலியாவை சென்றடைந்தது!
முகக்கவச ஏற்றுமதி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - சுங்கத் திணைக்கள ஊடக பேச்சாளர்!
இடைநிலை தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரம் தேசிய பாடசாலை அதிபருக்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சு...
|
|
|


