இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் படகு அவுஸ்திரேலியாவை சென்றடைந்தது!
Tuesday, May 3rd, 2016
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று அவுஸ்திரேலியாவின் கொகோஸ் தீவுகளை சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற நிலையில், திங்கட்கிழமை காலையில் இப் படகு கொகோஸ் தீவுகளை அடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது..
கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு ஒன்று அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
10 முதல் 11 மீற்றர் நீளமான மரத்திலான படகு ஒன்றில் 12 பேர் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் இது தொடர்பில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சின் பேச்சாளரோ, எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரோ கருத்து வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீரில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் கையூட்டல் பெறப்பட்டனவா? விசாரணை நடத்துமாறு நிதி மோசடிப் பிரிவுக்க...
பெப்ரவரி நடுப்பகுதியில் மூன்று இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படும் - சீனத் தூதர...
49 cc இயந்திர திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ய...
|
|
|


