மேலும் பல முன்னாள் போராளிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

Tuesday, January 18th, 2022

எதிர்காலத்தில் வாகன இறக்குமதியை அரசாங்கம் அனுமதிக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்போது மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஆற்றும் தமது கொள்கை விளக்க உரையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறினார்.

மேலும் வடக்கு கிழக்கில் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 90 சதவீதமானவை விடுவிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டிய அவர் .மீதமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பாக்க நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன் கடந்த நாட்களில் முன்னாள் போராளிகளை விடுவித்தமை போன்று எதிர்காலத்திலும் பலரை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: