50 ஆயிரம் கடற்றொழிலாளர்களுக்கு கடந்த வருடத்தில் காப்புறுதி!

Tuesday, March 6th, 2018

கடந்த ஆண்டு 67 பேருக்கு தியவரதிரிய நிவாரண கடன் திட்டத்தின் கீழ் கடன் பெற்றுக் கொடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சுத் தெரிவித்துள்ளது.

இதன் பெறுமதி 17 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். மீனவ சமூகம் இந்த திட்டத்தின் மூலம் தமது தொழிலை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு உதவிகளையும் பாதுகாப்பையும் வழங்குவதுஅரசாங்கத்தின் நோக்கமாகும்.

கடந்த ஆண்டு 17 ஆயிரத்து 831 மீன்பிடி படகுகள் இந்த திட்டத்தின் கீழ் காப்புறுதி செய்யப்பட்டுள்ளன. இதேவேளை இந்த காப்புறுதித் திட்டத்தின் மூலம் 49 ஆயிரத்து 848 பேர் காப்புறுதிசெய்யப்பட்டுள்ளனர்.

Related posts: