அமரர் பத்திநாதன் சைமனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி மரியாதை!
Sunday, October 8th, 2017காலஞ்சென்ற அமரர் பத்திநாதன் சைமனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார்.
முன்பதாக ஊர்காவற்றுறை கரம்பொனில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் முக்கியஸ்தர்களான யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக செயலக நிர்வாக செயலாளர் வசந்தன், கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச நிர்வாக செயலாளர் ஜெயகாந்தன், கட்சியின் வட்டுக்கோட்டை பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தனர்.
Related posts:
5 வது நாடாக சார்க் மாநாட்டை புறக்கணித்தது மாலத்தீவு!
மீண்டும் பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு!
பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவண் விஜேவர்தன நியமனம்!
|
|