ஐந்து மாதங்கள் – மீண்டும் அதிகாரக் குறைப்பு!

Friday, February 10th, 2017

காணாமல்போனோர் பணியகச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து மாதங்களே இருக்கும், நிலையில் அதன் அதிகாரத்தைக் குறைக்கும் திருத்தச்சட்டம் ஒன்றை அரசாங்கம் நிறைவேற்றவுள்ளது.

அனைத்துலக அழுத்தங்களின் காரணமாக, அரசாங்கம் காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்கும் சட்டத்தை கடந்த 2016 ஓகஸ்ட் 23 ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றியது.

இந்தச் சட்டம் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதால், இதில் திருத்தம் ஒன்றைச் செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டின் 14 ஆவது இலக்க, காணாமல்போனோர் பணியக சட்டத்தின் ‘அ’ பந்தியில், 11 ஆவது பிரிவில் திருத்தம் செய்வதற்கான யோசனையை கடந்த வாரம் அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்திருந்தார்.

இதற்கமைய, காணாமல் போனோருக்கான பணியகம் தனது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு, தனிநபர் அல்லது அமைப்புடன் உடன்பாடுகளை செய்து கொள்ளலாம் என அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் நீக்கப்படவுள்ளது.

இதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்த திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Kaanaamal-415x260

Related posts: