அனைத்து வகையான லஞ்ச்ஷீற்களையும் தடை செய்ய நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Tuesday, June 22nd, 2021

விரைவில் அனைத்து வகையான உணவு பொதியிடும் லஞ்ச்ஷீற்களையும் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அத்துடன் இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் விரைவில் உக்கக்கூடிய தன்மையுடைய லஞ்ச்ஷீற்களை அறிமுகப்படுத்துவதாக பல நிறுவனங்கள் அறிவித்திருந்தாலும், இதுவரை அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது உலகில் எந்தவொரு நாடும் லஞ்ச்ஷீற்களையும் பயன்படுத்துவதில்லை எனத் தெரிவிக்கும் அமைச்சர், லஞ்ச்ஷீற்களை  பயன்படுத்தும் ஒரேயொரு நாடு  இலங்கை மாத்திரமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வருடாந்தம் 106 டன் லஞ்ச்ஷீற்களையும் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கமைய 10 மில்லியனுக்கும் அதிகமான லஞ்ச்ஷீற்களையும் நாளாந்தம் வீசப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய சுற்றாடல் அமைச்சர்  இந்நிலையிலேயே அனைத்து வகையான லஞ்ச்ஷீற்களையும் தடைசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: