3 வார கால பகுதிக்குள் சந்தையில் சிமெந்து – கட்டடப் பொருள் மற்றும் தொழில்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர்!

Monday, February 7th, 2022

அரசாங்கம் இறக்குமதி செய்துள்ள் சிமெந்து 3 வார காலப் பகுதிக்குள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக கட்டடப் பொருள் மற்றும் தொழில்துறை அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சின் செயலாளர் கீர்த்தி ரஞ்ஜித் அபயசிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிமெந்து மற்றும் ‘தரையோடு’ இறக்குமதிக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்

சிமெந்தின் விலையேற்றம் மற்றும் தரையோடுகளுக்கான தட்டுப்பாட்டினால் மக்கள் இடையூறுகளை எதிர்கொண்டுள்ளனர். இதனைத் தடுப்பதற்காகவே ஜனாதிபதி இந்த ஆலோசனை வழங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்தே அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: