அனுமதிப்பத்திரமற்ற வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு!
Thursday, May 16th, 2019
சட்டவிரோத வெடிபொருட்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
அனுமதிப்பத்திரமற்ற வெடிபொருட்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான குறித்த கால எல்லை இம்மாதம் 20ஆம் திகதி காலை 6.00 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்தக் காலப்பகுதியின் பின்னர் இவற்றைக் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்தார்.
அனுமதிப்பத்திரமற்ற அல்லது சட்டவிரோத வெடி பொருட்களை வைத்திருப்போர் தொடர்பில் பொலிசாருக்கு தகவல்களை வழங்குவதற்காக செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையில் மூன்று நாட்களுக்குள் வழங்க முடியும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக இலாபத்தை பதிவு செய்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
யாழ்ப்பாணத்தில் இராணுவம் வெளியேறிய காணிகளை மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை - மாவட்ட அரச அதிபர் தெரிவி...
எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் 13 இலட்சம் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன -அமைச்சர் கஞ்சன விஜேசேக...
|
|
|


