2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக இலாபத்தை பதிவு செய்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
Tuesday, April 19th, 2022ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டில் 1.7 மில்லியன் டொலர் லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கொரோனா தொற்றுநோய் பாதிப்பிலும் இவ்வளவு லாபத்தைப் பதிவு செய்திருப்பது சிறப்பு என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
2006 ஆம் ஆண்டுமுதல் இன்று வரையிலான நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இலாபம் ஈட்டியது இதுவே முதல் தடவையாகும்.
2021-22 நிதியாண்டில் ஊழியர்களின் செலவுகள் மற்றும் மேல்நிலைகளைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இந்த இலக்கை எட்ட முடிந்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் கல்வியை மேம்படுத்துவதற்கான அனைத்தையும் செய்வதற்கு தயாராக உள்ளேன் - ஆளுநர் ரெஜினோல்ட் குரே!
கொரோனா தொற்று தொடர்பில் யாழ் மாவட்டம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் தொடர்ந்தும் அபாயம் உள்ளது – மாவட்ட...
இலங்கையர்களுக்கு மீண்டும் இலத்திரனியல் விசாக்களை வழங்கும் இந்தியா !
|
|