ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
Saturday, June 10th, 2017
ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கொழும்பு ஆமர் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது அவரிடம் இருந்து ஒரு கிலோ 272 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.இதேவேளை ,யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 5.6 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. காங்கேசன்துறை கடற்பரப்பில் பையொன்றில் மிதந்து வந்த நிலையில் குறித்த ஹெரோயின் போதைப்பொருள் கடற்படையினரால் நேற்று மீட்கப்பட்டது
மீட்கப்பட்ட போதைப்பொருள் 5.6 கோடி ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது
குறித்த போதைப்பொருள் காங்கேசன்துறை காவல்துறையினரிடம் கடற்படையினால் கையளிக்கப்பட்டதையடுத்து, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
வடமேல் மாகாணத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் நீக்கம்!
நக்ல்ஸ் மலைத்தொடரிற்கு சென்ற ஏழு பேர் மாயம்!
பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் - வட மாகாண சமுத...
|
|