அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் கைது!
Friday, June 23rd, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
இலங்கையின் வடமேற்குப் பகுதியிலுள்ள நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது குறித்த நான்கு இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நான்கு இந்திய மீனவர்களையும் கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்கள் பயணித்த படகையும் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்த மீனவர்களையும் படகையும் யாழ்ப்பாணம் மீன்பிடித்துறை அதிகாரிகளிடம் கையளிக்க இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உர மானியத்தை தொடர்ந்தும் வழங்குவதற்கு நடவடிக்கை !
நுழைவு அனுமதி காலாவதியாகி இருப்பினும் வெளியேற முடியும் - இலங்கை பணியாளர்களுக்கு சலுகையளித்தது சவுதி!
இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட அபூர்வ இரத்தினக்கல் - கொள்வனவு செய்வதில் 50 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்...
|
|