மற்றுமொரு குப்பை பிரச்சினை!
Sunday, April 30th, 2017ஒஹிய பிரசேத்தில் அரசின் பயிர்ச் செய்கை நிலத்தில் முறையற்ற விதமாக குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்படும் அச்சுறுத்தல் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஒஹிய மற்றும் ஹோர்டன்தென்ன பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் ஒன்று சேர்கின்ற குப்பைகள் முறையற்ற விதமாக இப்பிரதேசத்தில் கொட்டப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
எதிர்வரும் மழை காலத்தில் இப்பிரதேசத்தில் இருக்கின்ற தின்மக் கழிவுகள் நீரினால் அடித்துச் செல்லப்பட்டு நீர் தேக்கங்களில் தேங்கி நின்றால் பாரிய சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக இந்த சுற்றாடல் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு எடுக்குமாறு பிரதேசவாசிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
அபிவிருத்தி தொடர்பான தகவல்களை கொண்டுசெல்வது சமூக ஊடகங்களின் கடமை!
தொடரும் காலநிலை சீர்கேட்டின் எதிரொலி - மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் அதிகரிப்பு - நுகர்வோர் கவலை!
இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு ஈரான் அர்பணிப்புடன் செயற்படும் - ஈரான் வெளிவிவகார ...
|
|