இலங்கை ஜனாதிபதி விஜயம் இருநாட்டு உறவை வலுப்படுத்தும்- இந்தியா!
Friday, May 13th, 2016
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தி வலுப்படுத்திக் கொள்ள இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயம் உதவும் என்று இந்திய அரசாங்கம் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி இன்றும் நாளையும் இந்தியாவில் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தநிலையில் அவர் நாளை உத்தரபிரதேஸில் நடைபெறவுள்ள மகாகும்பா நிகழ்வில்பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அவர் சாஞ்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.அத்துடன், மஹாபோதிக்கும் அவர் செல்லவுள்ளார்.
இதன்போது அனாகரிக தர்மபாலவின்சிலையை அவர் திறந்துவைக்கவுள்ளார்.
இதனையடுத்து புதுடில்லிக்கு செல்லும் ஜனாதிபதி, இந்திய பிரதமருடன் இரவுப் போசனத்திலும்பங்கேற்கவுள்ளார்
Related posts:
போலியோ அச்சுறுத்தல் நாட்டில் இல்லை - பிரதமர் ரணில்
புகையிரதத்தில் கதவைத் திறக்காத இளம் தம்பதிகள்!
40 வருடங்களாக சீரமைக்கப்படாது இருக்கும் பிராமணவோடை வீதியை சீரமைக்கக் கோரிக்கை!
|
|