நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்காணிக்க காணொளி பதிவுகள் பரிசோதனை – சபாநாயகர் !

Wednesday, August 2nd, 2017

நாடாளுமன்றத்தில் அமைதியற்ற வகையில் செயற்பட்டு சபை நடவடிக்கைளுக்கு இடையூறு விளைவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்

இதுதொடர்பான காணொளி பதிவுகளை தாம் பரிசோதித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவிருந்தது

இதன்போது ஒன்றிணைத்த எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகரின் ஆசனத்திலும் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்திலும் அமர்ந்து சபை நடவடிக்கைகளை குழப்பினர்அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையின் கோரம் மணியை ஒலிக்கச் செய்து சபையை கலைத்துவிட்டார்

Related posts: