வாகன விபத்து – கடந்த 24 மணி நேரத்தில் வாகன விபத்துக்களினால் 9 பேர் பலி!
Sunday, July 4th, 2021கடந்த 24 மணிநேரத்தில் வாகன விபத்துக்களினால் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என சிரேஸ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதில் பாதசாரிகள் மூவரும் , உந்துருளி செலுத்துநர்கள் ஐவரும் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்..
சாரதிகளுக்கு ஏற்படும் நித்திரைக் கலக்கம், உடல்நலக் குறைவு, மது அருந்தியிருத்தல், கவனயீனம் மற்றும் வீதியின் குறைப்பாடுகளைக் கவனத்திற்கொள்ளாமல் வாகனங்களை செலுத்துதல் என்பன அண்மைக்கால வாகன விபத்துக்களுக்கு காரணமாக கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீதிமன்ற அவமதிப்பு விவகாரம்: நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து வடபகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பில...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார் நீதிமன்றத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபையின் ...
|
|