வடமாகாண விவசாயக் கண்காட்சி ஆரம்பமானது!
Wednesday, September 20th, 2017வடமாகாண விவசாயக் கண்காட்சி யாழ். திருநெல்வேலியிலுள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமானது. “காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக் கூடிய சந்தையை நோக்கிய நிலைபேறான விவசாயம்” எனும் தொனிப் பொருளில் குறித்த கண்காட்சி இடம்பெறுகிறது.
வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற கண்காட்சியில் மத்திய விவசாயத் திணைக்களத்தின் பிரிவுகள், வடமாகாணத்தைச் சேர்ந்த பல்வேறு திணைக்களங்கள், விவசாயத்துடன் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கண்காட்சி எதிர்வரும்-23 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நான்கு தினங்கள் காலை-09 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை நடைபெறவுள்ளது.
Related posts:
சாட்சியங்கள் போதுமானதாக இல்லை : நீண்டகால சிறைக் கைதி விடுதலை!
டெங்கு நோய்த்தொற்று வடமராட்சியில் தீவிரம் பெப்ரவரியில் மட்டும் 77பேர் பாதிப்பு!
மின்சாரத் தடையின் பின்னணியில் சதி - ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு!
|
|