யாழ். மாவட்டச் சமாதான நீதவான்கள் சங்கம் அங்குரார்ப்பணம்!

Saturday, August 27th, 2016

யாழ். மாவட்டச் சமாதான நீதவான்கள் சங்கம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. யாழ். கண்டி வீதியிலுள்ள சர்வோதய மண்டபத்தில் அண்மையில் அங்குரார்ப்பணக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நா. தனேந்திரன் சங்கத் தலைவராகவும், இ. மயில் வாகனம், நீ. பிரபாகரன் ஆகியோர் உபதலைவர்களாகவும், க. நாகேந்திரம் செயலாளராகவும், என்.எஸ். திருச்செல்வம் உப செயலாளராகவும், ம. சஜீவன் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பிரதேச ரீதியாக ஒவ்வொரு பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: