மேலதிக ஊழியர்களை சேவையில் இணைத்து சம்பளம் வழங்கத் தடை !
Thursday, August 2nd, 2018
அரச நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமானவர்களை சேவையில் இணைத்து சம்பளம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திறைசேரியின் முகாமைத்துவ திணைக்களத்தின் முழுமையான அங்கீகாரம் இன்றி அரச நிறுவனங்களுக்கான பணிக் குழுவினரை இணைத்துக் கொள்ளவும் அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்று நிருபத்தை அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு மாற்றமாக ஆட்சேர்ப்புக்களை மேற்கொண்ட உரிய நிறுவனத்தின் தலைவர், மாகாண பிரதம செயலாளர், நிதிப் பிரிவின் தலைவர், அமைச்சின் செயலாளர் ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும் என்று சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
ஜனாதிபதி ஜப்பான் பயணம்!
மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பூமியின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண...
பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக 2 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் - ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச...
|
|
|


