ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீரவீராங்கணைகளுடன் 46 அதிகாரிகள் சென்றமை தொடர்பில் விசாரணை!

Monday, August 29th, 2016

அண்மையில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் இலங்கையின் சார்பில் 9 வீர வீராங்கணைகள் பங்கேற்றிருந்தனர். இவர்களுடன் மொத்தமாக 46 அதிகாரிகளும் பிரேசில் சென்றிருந்தமை குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.

கூடிய விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் தேசிய ஒலிம்பிக் கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளார்.தேசிய ஒலிம்பிக் கமிட்டி தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எதிராக தொடர்ச்சியாக செய்யப்பட்டு வரும் முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது.

தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் கடந்த ஐந்தாண்டு கால நடவடிக்கைகள் குறித்தும் இந்த அறிக்கையில் விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒன்பது வீர வீராங்கணைகளுக்காக ஏன் 46 அதிகாரிகள் பிரேசில் சென்றார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: