IPL கிரிக்கட் போட்டியின் ஆரம்ப நிகழ்வு பிற்போடப்பட்டது

Wednesday, March 7th, 2018

இந்தியன் பிரிமியர் லீக் 20க்கு 20 கிரிக்கட் போட்டியின் ஆரம்ப நிகழ்வு ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் தற்போது 7ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐ.பீ.எல். 20க்கு இருபது கிரிக்கட் தொடரில் இதுவரை 10 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில், அடுத்த மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகும் 11வது இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடர் 9 மைதானங்களில் 51 நாட்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டு தடைக்குப் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட மொத்தமாக 8 அணிகள் இந்த ஆண்டு போட்டிகளில் பங்குகொள்கின்றன.

முன்னர் மும்பாய் கிரிக்கட் கழக மைதானத்தில் நடைபெற இருந்த ஆரம்ப நிகழ்வு பின்னர் வான்கடே மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி நடைபெறும் ஆரம்ப போட்டியில் நடப்பு வெற்றிக்கிண்ண அணியான மும்பாய் இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கின்றது.

Related posts: