மினி பஸ்ஸில் கைப்பையை வெட்டி பணப்பை திருட்டு!!
Thursday, December 1st, 2016
மினிபஸ்ஸில் நின்ற நிலையில் பயணஞ்செய்து கொண்டிருந்த வயோதிபப்பெண் ஒருவர் மணிபேர்ஸை திருடனிடம் பறிகொடுத்துள்ளார். தோளில் தொங்கவிடப்பட்டிருந்த கைப்பையை பிளேட்டினால் தந்திரமாக வெட்டிய திருடன், அற்குளிருந்த அடையாள அட்டை, வங்கிப்புத்தகங்கள், பணம் ஆகியவை அடங்கிய மகிபேர்ஸை எடுத்துச் சென்றுள்ளான்.
இத்துணிகரமான திருட்டு நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்து மாதகல் சென்றுகொண்டிருந்த மினிபஸ்ஸில் இடம்பெற்றுள்ளது. மானிப்பாயைச் சேர்ந்த வயோதிபப்பெண்ணே பாதிக்கப்பட்டவர் ஆவார். யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து மாதகல் நோக்கி செல்லும்போதே சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டக்குச் சென்ற பின்னரே அவருக்குப் பொருள்களைப் பறிகொடுத்தது தெரியவந்துள்ளது
Related posts:
தேர்தல்கள் காலதாமதமின்றி உரிய தினத்தில் நடத்தப்பட வேண்டும் - ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி!
தெரிவுக்குழுவின் அறிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி சாட்சியம்!
எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பலை அகற்றும் பணிகள் நவம்பரில் முன்னெடுப்பு - நீதி அமைச்சர் அலி சப்ரி தகவல்!
|
|