வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகத் கூறி மில்லியன் கணக்கான பெரும் மோசடி – பொலிஸாரால் ஒருவர் கைது!

Monday, August 24th, 2020

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகத் தெரிவித்து சர்வதேச தொலைபேசி எண்கள் மூலம் இலங்கையில் உள்ள பல்வேறு நபர்களை அழைத்து ஈஸி காஷ் திட்டத்தில் இருந்து பில்லியன் கணக்கான ரூபாய் சம்பாதித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரி ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேல் மாகாணத்தின் மூத்த டி.ஐ.ஜி தேசபந்து தென்னகூன் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இலங்கையில் வசித்து வருகிறார், அவர் வெளிநாடுகளில் வேலை இருப்பதாக இணையத்தில் விளம்பரம் செய்கிறார்.

இவரது விளம்பரத்தை பார்வையிட்டவர்கள் அவரை தொடர்பு கொண்டால் அவர் விண்ணப்பதாரரை ஒரு வெளி நாட்டின் தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பார். விண்ணப்பதாரரைத் தொடர்புகொள்வதற்கு பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தினார் மற்றும் ஈஸி காஷ் மூலம் பணம் சம்பாதிக்க அவர்களை ஏமாற்றினார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: