6000 சீனப் பணியாளர்கள் இலங்கையில்!
Friday, May 25th, 20186000 இற்கும் அதிகமான சீனர்கள் நாட்டில் பல்வேறு திட்டங்களில் பணியாற்றி வருவதாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக விவகாரங்களைக் கையாளும், அதிகாரியான யாங் சூயுவான் தெரிவித்துள்ளார்.
இலங்கை – சீன கூட்டுத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதிலேயே பெரும்பாலான சீனர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், கொழும்பு துறைமுக நகரத் திட்டம், நெடுஞ்சாலைத் திட்டங்கள், மற்றும் வானுயர்ந்த கட்டடங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகளிலேயே சீனப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை – சீன கூட்டுத் திட்டங்களில் தொடர்புடைய சீன நிறுவனங்கள், சீனப் பணியாளர்களை பணியில் அமர்த்துவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தொற்றா நோய் தொடர்பான சர்வதேச மாநாடு ஜனாதிபதி தலைமையில்!
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - பொதுமக்களிடம் கொரோனா செ...
சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை முறையிடுங்கள் - சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வேண்டுகோள் !
|
|