மாதகலில் 54 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
Thursday, November 3rd, 2016
இளவாலை – மாதகல் பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 54 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் மோசடி தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இந்த கஞ்சா தொகை நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
வீட்டின் சமையல் அறையில் அடுப்பு அமைந்துள்ள இடத்தில் நிலத்திற்கு அடியில் இந்த கஞ்சா தொகை புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது.இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டுள்ள இந்த கஞ்சா தொகையில் பெறுமதி 60 இலட்சத்திற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts:
அதிக இலங்கையர் வாய், கழுத்து சார்ந்த புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் - புற்றுநோய் ஒழிப்பு செயற்...
ஏப்ரல் 21 ஆம் திகதி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி - கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
கடன் வாங்குவதற்கு பதிலாக, கடன் அல்லாத அந்நிய செலாவணியை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் – பிரதமர் ம...
|
|
|


