பேருவளை – பன்னில பகுதியில் 140 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
Wednesday, April 1st, 2020
பேருவளை, பன்னில பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதியில் வசித்த 140 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த பொது சுகாதார சேவை பரிசோதகர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தீர்மானம் சற்று முன்னர் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் அட்டுலுகம மற்றும் அக்குரணை ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெளியேறவோ அல்லது வேறு இடங்களிலிருந்து பிரவேசிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற அன்று நடந்த தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இழப்பீடு!
நாடுகடத்தப்பட்ட இலங்கையர் !
அதிகமாக சிம் அட்டைகளை வாங்க முடியாத வகையில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை!
|
|
|


