புதுவருட காலத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை ஆபத்து – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

Thursday, April 1st, 2021

பொதுமக்களின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக புதுவருடத்துடன் மூன்றாவது கொரோனா அலைக்கான சாத்தியங்கள் உள்ளன என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு பொருட்கொள்வனவிற்காக பெருமளவு மக்கள் வர்த்தகநிலையங்களின்முன்னாள் காணப்படுவதை ஏற்கனவே நாங்கள் பார்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகளால் கூட இதனை முற்றிலும் கட்டுப்படுத்தமுடியாது என தெரிவித்துள்ள அசேல குணவர்த்தன கொரோனா வைரஸ் ஆபத்தினை தவிர்ப்பதற்கு பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டியது பொதுமக்களே என குறிப்பிட்டுள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு பொதுமக்களிற்கான பல சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிடவுள்ளதாக அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Related posts: