பேருந்து நிறுத்தப்படுவதற்கு முன்னதாக இறங்கியமையால் தவறி விழுந்த பெண் படுகாயம்!

Tuesday, June 28th, 2016

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் பேருந்து நிறுத்தப்படுவதற்கு முன்னதாகக் கீழே இறங்கியமையால் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை(27) அதிகாலை-4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கொழும்பிலிருந்து அரச பேருந்தில் பயணித்த குறித்த பெண் யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் சாரதி பேருந்தை நிறுத்துவதற்கு முன்னதாகக் கீழே இறங்கியுள்ளார். இதன் காரணமாகக் கீழே விழுந்த பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சம்பந்தப்பட்ட பேருந்தினைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் யாழ். கச்சேரிப் பகுதியைச் சேர்ந்த நாகரட்ணம் பவானி(வயது-45) என்ற பெண்ணே படுகாயமடைந்தவராவார்.

Related posts: