600 கோடி ரூபா மோசடி செய்யத்திட்டம்! – சுயதொழில் வேலைவாய்ப்பு தொழிற்சங்கம் ஆதங்கம்!

Thursday, July 28th, 2016

மேல்மாகாணங்களில் உள்ள முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதன் மூலம் 600 கோடி ரூபாயினை மோசடி செய்வதற்கு வீதி போக்குவரத்து அதிகார சபை திட்டமிட்டுள்ளதாக சுயதொழில் வேலைவாய்ப்பு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் முச்சக்கர வண்டிகளின் பதிவுகளுக்காக இதுவரை 100 ரூபாய் அறவிடப்பட்டு வந்ததாகவும், ஆனால் தற்போது பதிவுக்கட்டணம் 350 ரூபாயிலிருந்து 1750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலவசமாக தரப்படும் என குறிப்பிடப்பட்ட மீற்றர் தற்போது 1400ரூபாவுக்கு வழங்கப்படுவதாகவும், போக்குவரத்து அதிகார சபையினால் வழங்கப்படும் சிம் அட்டையினை பதிவு செய்த முச்சக்கர வண்டிகள் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த சிம் அட்டைக்காக நாளொன்றிட்கு 40 ரூபாய் படி மாதத்திற்கு 1200ரூபாவும், வருடத்திற்கு 14,400 ரூபாவையும் பெறுவதற்கு அதிகார சபைதிட்டமிட்டுள்ளதாகவும் இந்த தொழிற்சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் முச்சக்கர வண்டிகளின் பின்புறம் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களுக்காக 250ரூபாய் படி 600 கோடிகளை மோசடி செய்வதற்கு வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக போக்குவரத்து அமைச்சிடம் மனுஒன்று வழங்கியுள்ளதாகவும் சுயதொழில் வேலைவாய்ப்பு தொழிற்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related posts:


மிகை ஊழியர் என்று பாராது அதிபர் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் - பாதிக்கப்பட்ட அதிபர்கள் கோரிக்கை!
நெருக்கடிக்கு மத்தியிலும் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் - சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன...
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு – கட்டுப்படுத்துவது அவசியமென வலியுறுத்...