புற்றுநோய்க்காக நிதியுதவி கோரியுள்ள மஹேல!
Wednesday, September 7th, 2016
காலி கராப்பிட்டிய சிகிச்சை மத்திய நிலையத்தை அமைப்பதற்காகவும், இலங்கையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள புற்றுநோயாளர்களின் சிகிச்சையின் பொருட்டும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்த்தன நிதியுதவியைக் கோரியுள்ளார்.
தனது டுவிட்டர் வலைத்தளம் மூலம் இவர் இந்த நிதியுதவியைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் குறித்த புற்றுநோய் எதிர்ப்பிற்காக ‘ட்ரெயில்2016’ என்ற பெயரில் பாதயாத்திரை ஒன்றும் அடுத்த மாதம் 6ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதயாத்திரையானது இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்காரமற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோரால் வழிநடத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவர்களின் நோக்கங்களுக்கமைய 5 மில்லியன் டொலர்கள் தேவையாக இருப்பதாகவும், இதுவரை 902381 டொலர்களே நிதியுதவியாக கிடைத்துள்ளதாகவும் இணையம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
|
|