யாழ்ப்பாணத்தில் 20 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை: எவருக்கும் தொற்று இல்லை!
Wednesday, April 8th, 2020யாழ்ப்பாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று சந்தேக நபர்களுக்கான பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பதினெட்டுப் பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனாவைத்தியாசாலையில் இருவருக்கும் கோப்பாய் பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் 20 பேருக்கும் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அவர்கள் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று இல்லை என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குறித்த தகவல்களை வடக்கு மாகாணச சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
Related posts:
முல்லைத்தீவில் இடைவிலகும் மாணவர்கள் தொகை அதிகரிப்பு!
எரிபொருள் விலை சீராக்கல் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது !
சமுர்த்தி பயனாளிகளுக்கு 7 சதவீத வட்டிக்கு புதிய கடன் திட்டம் - பிரதமர் அறிவிப்பு!
|
|