புதிய சிகரட் நிறு­வ­னம் குறித்த தகவல் – ஜனாதிபதியின் கவனத்திற்கு!

Wednesday, April 19th, 2017

இலங்­கைக்குள் மற்­று­மொரு சிகரட் நிறு­வ­னத்தை பதிவு செய்ய தயா­ராகி வரு­வ­தாக வெளியான தகவல் குறித்து ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்டு செல்ல அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

சிகரட் பாவ­னையை கட்­டுப்­ப­டுத்த ஜனா­தி­ப­தியால் மேற்­கொள்­ளப்­படும் நடவடிக்­கை­க­ளுக்கு தமது சங்கம் நிபந்­த­னை­க­ளற்ற ஆத­ர­வ­ளித்­துள்­ள­தாக, அச்­சங்­கத்தின் செயலாளர் நலிந்த சொய்சா தெரிவித்தார்.

அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் தலை­மை­யகத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,  இலங்கைக்குள் புதிய சிகரட் நிறு­வனம் ஒன்று பதிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக செய்­திகள் வெளியாகியுள்­ளன.

இது குறித்து ஆராய்ந்து, இதன் பின்னணியில் இருக்கும் வர்த்­த­கர்கள் தொடர்பில் நாட்­டுக்கு வெளிப்ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு, ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுக்க எமது சங்கம் முடிவு செய்­துள்ளது.

நாட்டில் சிகரட் உற்­பத்­தினை குறைப்­ப­தற்­காக அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் ஜனா­தி­பதி மைத்தி­ரிபால சிறி­சே­ன­வுக்கு  பக்­க­ப­ல­மாக செயற்­பட்­டுள்­ளது. அதனால் பக்க  பல­மாக செயற்பட்டோம். எனவே தற்­போது சிகரட் உற்­பத்­தியை தடுப்­ப­தற்­கான செயற்­பா­டு­களை முன்னெடுத்­தி­ருக்க முடியும்.

இவ்­வாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டில் சிகரட் உற்­பத்­தியை குறைக்க பல தரப்புகளுடன் இணைந்து செயற்­பட்டு வரு­கின்ற போது மறு­பு­றத்தில் சட்டவிரோ­த­மா­ன முறையில் சிகரட் நிறு­வனம் ஒன்று நாட்­டினுள் நிறு­வப்­பட்டு வரு­கின்­றது.

இந்த செயற்­பா­டு­களின் பின்னால் உள்ள வர்­த்­தகர்கள் யாவர் என்­பதை நாட்­டிற்கு வெளிப்­ப­டுத்த வேண்டும் என ஜனாதிபதியிடத்தில் கோரிக்கை விடுக்கும் அதேவேளை நாட்டில் சிகரட் உற்பத்தியை மட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முழு மூச்சுடன் செயற்படும் என்றார்.

Related posts: