புகையிரத விபத்தினால் 250 பேர் உயிரிழப்பு!
Sunday, August 7th, 2016
வருடத்தின் இதுவரையான காலப்பகுயில் புகையிரதம் மோதுண்டு 250 பேர் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் அதிகமானோர் தற்கொலை செய்துக் கொண்டவர்கள் எனவும் புகையிரத பாதுகாப்பு அத்தியட்சகர் அநுர பிரேமரத்தன தெரிவித்துள்ளார்.
மேலும் சமிஞ்சை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள புகையிரத கடவைப் பகுதிகளிலும் அதிகமான விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும் ரயில் விபத்துக்களை தடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் புகையிரத பாதுகாப்பு அத்தியட்சகர் அநுர பிரேமரத்தன குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
15 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்.!
சிறைச்சாலை வாகன துப்பாக்கி சூடு தொடர்பில் இருவர் கைது!
பேச்சுவார்த்தை வெற்றி - தொடருந்து சாரதிகள் சங்கம் தெரிவிப்பு!
|
|