இலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா தொற்று உயிரிழப்புக்கள் பதிவு!!

Thursday, May 20th, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மூவாயிரத்து 623 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 36 கொரோனா தொற்றாளர்களின் மரணங்களும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் ஒரேநாளில் அதிகூடிய கொரோனா பாதிப்பு மற்றும் அதிகூடிய உயிரிழப்பு இது பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா பாதிபப்புக்கு உள்ளானவர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 51ஆயிரத்து 343ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 222 பேர் இன்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 367 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 51ஆகப் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், 27ஆயிரத்து 925 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் இதுவரை 13 இலட்சத்து 97 ஆயிரத்து 999 பேருக்குச் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டோஸ் இதுவரை மூன்று இலட்சத்து 121பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: