நீதிபதி சொன்னார் முகத்தில் குத்தினேன்!

Wednesday, August 3rd, 2016

சுன்னாகம் பகுதியில் பெண்ணொருவரைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தரை குறித்த பெண்ணின் சகோதரன் முகத்தில் குத்தியுள்ளார் இதனால் படுகாயமடைந்த உடுவில் பகுதியைச் சேர்ந்த கே. அதிஷ்டராஜா (வயது 45) என்ற குடும்பஸ்தர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம், கடந்த திங்கட்கிழமை (01) இடம்பெற்றுள்ளது. இது தொடரபில் மேலும் தெரியவருவதாவது – மேற்படி குடும்பஸ்தர், நீண்டகாலமாக தனது தங்கைக்குத் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் அதனாலேயே, தொந்தரவு கொடுத்தவரின் முகத்திலேயே தான் குத்தியதாகவும் அந்நபர் தெரிவித்துள்ளார்.

3 சகோதரிகளுக்குத் தொந்தரவு கொடுப்பவர்களுக்கு முகத்திலேயே குத்துங்கள் என, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கூறியதற்கமைய தான் இவ்வாறு செய்ததாகவும் அப்பெண்ணின் சகோதரன் சுன்னாகம் பொலிஸாரிடம் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: